திண்டுக்கல், செப். 18: அஞ்சல்துறை சார்பில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை வாடிக்கையாளர் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
தற்போது இக்கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் கடிதம், ஸ்பீடு போஸ்ட், பார்சல், மணியார்டர், சேமிப்புக்கணக்கு, கவுண்டர் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள் குறித்த புகார், ஆலோசனைகளை வரும் 20ம் தேதிக்குள் அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.