சேலம், செப்.18: திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்பியுமான டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாற்று சிறப்பு மிக்க திராவிட முன்னேற்ற கழகம் எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக பொறுப்ேபற்ற தளபதி மு.க.ஸ்டாலின், ஆளுகின்ற மக்கள் விரோத, கொத்தடிமை அதிமுக ஆட்சியில் புரையோடிப்போன ஊழலை எதிர்த்து, களம் காண சேலம் வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் தமிழ் சமுதாயத்திற்கு வாராது வந்த மாமணியாக, அரிய பொக்கிஷமாக வருகிறார். அடிமட்ட தொண்டனாக தொடங்கி, 50 ஆண்டு கால அரசியல் பாரம்பரியத்தோடு உழைப்பால் உயர்ந்து, பொதுவாழ்வில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத, அப்பழுக்கற்ற தலைவர் வருகிறார். தலைவர் கலைஞருக்கு பிறகு தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ்மொழியை காப்பாற்றவும் போராட்ட களம் காண வருகிறார். கொள்கை பிடிப்பையும், லட்சியத்தையும், உழைப்பையும் மதிக்கிற, பேணி காக்கிற லட்சியத்தலைவராக, மக்கள் தான் நம் எஜமானர்கள் என்று, மக்களுக்காகவே பாடுபடுகிற ஆற்றல், துணிவு மிக்க தமிழின தலைவராக, தென்னகத்து சூரியனாக மு.க.ஸ்டாலின் வருகிறார். கழகத்தை அவருடைய தலைமையில் அரியணை ஏற்ற சூளுரை ஏற்போம். வாருங்கள் களம் காண்போம்.