ஊழல் ஆட்சியை அகற்ற திமுக தலைவரை வரவேற்க திரண்டு வாருங்கள்

கெங்கவல்லி, செப்.18: சேலம் கலெக்டர் அலுவலகம் முன் இன்று நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.   திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர், சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், அவரது தலைமையில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவும் தொண்டர்கள் திரண்டு வரவேண்டும். இதில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள், ஒன்றியம், பேரூர், ஊராட்சி மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த அமைப்பாளர்கள், தொண்டர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: