வீரபாண்டி ராஜா தலைமையில் ஸ்டாலினை வரவேற்க அணி திரள்வோம்

சேலம், செப்.18: திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக சேலம் வரும் ஸ்டாலினை வரவேற்க வீரபாண்டி ராஜா தலைமையில் அணி திரள்வோம் என பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் 44வது டிவிசன் முன்னாள் திமுக செயலாளர் கு.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: அதிமுக அரசின் ஊழல் முகத்திரையை கிழித்திடும் வகையில், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று(செவ்வாய்) காலை 9 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பள்ளி பருவம் முதல் பகுத்தறிவு உணர்வுடன் வளர்ந்து படிப்படியாக பல பொறுப்புக்களை வகித்த தளபதியார், திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக சேலத்தில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகிறார். எனவே, பொதுமக்களும், திமுக தொண்டர்கள் அனைவரும் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் அணி திரண்டு, அவரை வரவேற்போம். மேலும் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Related Stories: