நெல்லை மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

பாவூர்சத்திரம், செப்.18: நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் பிறந்தநாள்  கீழப்பாவூரில் நடந்தது. கீழப்பாவூர்  திராவிடர்  கழக  திடலில்  அமைந்துள்ள பெரியார் உருவ சிலைக்கு  மாலை  அணிவிக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.  கீழப்பாவூர்  நகர செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்ல, கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்  ராமச்சந்திரன், நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, மேற்கு  ஒன்றிய  செயலாளர் ஜெயபாலன், யோநான், மேகலா செல்லத்துரை, வடகரை ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை மேற்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் சிவபத்மநாதன், பெரியார்  சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை  செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்  தளபதி முருகேசன்,  அன்பழகன், வளன் அரசு, மேகநாதன், நாகராஜ், முருகன், அன்பரசு, கோபாலகிருஷ்ணன், தினேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் திரளாக கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன் அறிவழகன் தலைமையில் திமுக மற்றும் திராவிடர் கழக தொண்டர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ராமசாமி, பொன்ராஜ், ராமச்சந்திரன், அருண், வீரன், ராமசாமி, அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிவகிரி:  வாசுதேவல்லூரில் பெரியாரின் 140வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு   மனோகரன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வாசுதேவநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த விழாவில் பெரியாரின் படத்துக்கு  மனோகரன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்  சவுக்கை வெங்கடேசன், ஒன்றியச்செயலாளர் மூர்த்திப்பாண்டியன், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் சாமுவேல், சீமான் மணிகண்டன், எம்எல்ஏ நேர்முக உதவியாளர் செம்புலிங்கம், உள்ளாறு மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:  சங்கரன்கோவில் நகர திமுக சார்பில் பெரியாரின் 140வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராஜதுரை தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் பலவேசம், தகவல் தொழில்நுட்ப அணி குமார், இளைஞரணி சரவணன், ராமதுரை, இலக்கிய அணி டைட்டஸ், இளங்கோ மாரியப்பன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். இளைஞரணி கார்த்தி, வார்டு நிர்வாகிகள் வௌ்ளத்துரை, சுரேஷ், பத்மநாதன், கலைஞர், முருகேசன், பழனிச்சாமி, தங்கவேல், மாரிச்சாமி, சுரேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: