தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

சங்கரன்கோவில், செப். 18:  சங்கரன்கோவில் காவேரிநகரைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் திவான் மைதீன்(48). கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் மகன் அன்வர் அலி என்பவர் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்து வந்தார். அவரிடம் சங்கரன்கோவில் கக்கன்நகரை சேர்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்காதர் (32) என்பவர் வெளிநாட்டிற்கு செல்லும் முன் மது குடிக்க அழைத்துள்ளாராம். இதனையறிந்த தீவான்மைதீன் அப்துல்காதரை கண்டித்தார். ஆத்திரமடைந்த அப்துல்காதர், அவரை அவதூறாகபேசி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து அப்துல் காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: