கீழப்பாவூர் பகுதியில் நாளை மின்தடை

தென்காசி, செப்.18:  கீழப்பாவூர் உபமின் நிலையத்தில் நாளை 19ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இது குறித்து தென்காசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:கீழப்பாவூர் உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் நாளை (19ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் கீழப்பாவூர் உபமின் நிலையத்திற்குட்பட்ட பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்க்காலிபட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: