அம்பை வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

அம்பை, செப். 18:  அம்பாசமுத்திரம்  வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் விழா நடந்தது.  அம்பை  மேலப்பாளையம் கீழ ரதவீதி லட்சுமி நர்ஸிங் ஹோம் வளாகத்தில் அமைந்துள்ள  வரசித்தி விநாயகர் தன்வந்திரி மகாவிஷ்ணு கோயில்  உள்ளது. இக் கோயிலின்  வருஷாபிஷேகம் விழா நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை  திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு  அனுக்ஞை, 9.30 மணிக்கு ஜெபம், கும்ப பூஜை,   10.00 மணிக்கு  மஹா கணபதி ஹோமம், தன்வந்திரி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.  பின் வரசித்தி விநாயகர், நாகராஜருக்கு அபிஷேக  அலங்கார தீபாராதனை நடந்தது.  11.00 மணிக்கு  விமான கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. 11. 30  மணிக்கு நடந்த தீபாராதனையையடுத்து பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  லட்சுமி நர்ஸிங் ஹோம் டாக்டர் லட்சுமி அம்மாள், லட்சுமி நிகேதன் பள்ளி  தாளாளர் டாக்டர் சிவபாலன், நிர்வாக குழு உறுப்பினர் திலீபன், பள்ளி  முதல்வர் அர்ச்சனா, லட்சுமி மருத்துவமனை, லட்சுமி கார்டன்ஸ், லட்சுமி  வித்யா நிகேதன் மேல் நிலைப் பள்ளி மற்றும் லாவன்யா நர்ஸிங் ஹோம்   நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து  கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 7 மணிக்கு  சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை லட்சுமி நர்ஸிங் ஹோம்  நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: