கடையம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

கடையம், செப். 18:  கடையம் அருகே ஜம்பு நதியில் மணல் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.கடையம் சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் தலைமையில் போலீசார் மாதாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடவாக்காடு ஜம்பு நதியில் மணல் அள்ளி வந்த டிராக்டரை மடக்கி பிடித்தனர். இதில் திரவியநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (50) என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் சிவசைலனூர் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் ஜோசப் செல்லத்துரை (40), திரவியநகரை சேர்ந்த திருமலைச்சாமி மகன் திருமலை முருகன்(35), எல்லைபுளியை சேர்ந்த இசக்கி துரை (50), திரவியநகரை சேர்ந்த செல்லப்பா மகன் கண்ணன் (42) ஆகியோர் திருட்டுத் தனமாக கடவக்காடு  பகுதி ஜம்பு நதி ஆற்றில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தசாமி, ஜோசப் செல்லத்துரை, கண்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய திருமலைகுமார், இசக்கிதுரை ஆகியோரை  தேடி வருகின்றனர். மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யபட்டது.

Related Stories: