நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்.28க்கு மாற்றம்

நெல்லை, செப். 18: நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்.28ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியிருப்பதாவது:நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  வருகிற 21ம் தேதி மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட வேண்டும். அன்று மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை நாளாக இருப்பதால், நான்காவது வெள்ளிக்கிழமையான 28ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக  இரண்டாம் தளத்திலுள்ள கூட்ட அரங்கில் வைத்து விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: