புதுச்சேரி, செப். 18: புதுவையில் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கோாி தி.வி.கழகத்தினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் தண்டனை கைதிகளில் 10 ஆண்டு தண்டனை முடித்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் ராதாகிருஷ்ணன் எம்பி, திமுக எம்எல்ஏ சிவா, சிபிஐ சலீம், சிபிஎம் பெருமாள், வி.சிறுத்தைகள் தேவ.பொழிலன், பகுஜன் சமாஜ் கட்சி மூர்த்தி, மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன், அம்பேத்கர் ெதாண்டர்படை பாவாடை ராயன், தந்தை பெரியார் திக வீரமோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் சமூக ஆர்வலர்கள், சிறைவாசிகளின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று தி.வி. கழகத்தினர் தெரிவித்தனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் எம்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.