புதுச்சேரி, செப். 18: தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருச்சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் திமுக, அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளையொட்டி புதுவை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தெற்கு மாநில திமுகவினர் அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் வடக்கு மாநில திமுகவினர் அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் அண்ணா சிலைக்கு மரியாதை செய்தனர்.அதிமுகவினர் மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் அன்பானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் வி.சிறுத்தை கட்சியினர் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுதவிர திராவிடர் கழகத்தினர் சிவ.வீரமணி, மாணவர் கூட்டமைப்பினர் சுவாமிநாதன், பொன்னுரங்கம் தலைமையில் புதிய நீதிக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.