மனநிலை பாதித்த பெண், செக்யூரிட்டி பரிதாப சாவு

புதுச்சேரி, செப். 18: முத்தியால்பேட்டையில் தனித்தனி சம்பவத்தில் மனநிலை பாதித்த பெண், செக்யூரிட்டி தவறி விழுந்து இறந்தனர்.    புதுவை, முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வசந்தி. இவரது மகள் மாணிக்கவள்ளி  (43). மனநிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணமாகவில்லை. தாய் பராமரிப்பில்  இருந்த மாணிக்கவள்ளி சம்பவத்தன்று வீட்டில் பெட்டில் படுத்திருந்தபோது தவறி  கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக  இறந்தார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.    

மற்றொரு வழக்கு:    புதுவை, மங்கலம், புதுநகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (58). நகராட்சி  ஊழியரான இவர் குருசுகுப்பம் கழிவறையில் செக்யூரிட்டியாக வேலை செய்தார்.  சம்பவத்தன்று பணியில் இருந்த அவர் அங்குள்ள பாத்ரூமில் கால்இடறி கீழே  விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  நிலையில் 16ம்தேதி இறந்தார். இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: