கட்டாமல் முடங்கிய ரேஷன் கடை கட்டிடம்

முஷ்ணம், செப். 18:முஷ்ணம் அருகே கள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பூண்டி கிராமத்தில் 250 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நியாய விலை கடை கட்டிடம் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பணி நிறைவு பெறாமல் உள்ளது. இந்த கட்டிடத்தில் சிலர் மது அருந்தி செல்வதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். போதிய கட்டிட வசதி இன்றி பழுதடைந்த வாடகை இடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை செயல்பட்டு வருகிறது. மழை காலங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொருட்களை முறையாக பராமரிக்க முடியவில்லை எனவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: