முந்திரி பருப்பு திருடிய ஊழியர்கள் 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, செப். 18:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் துரைமுருகன்(41). இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் முந்திரி கொட்டை உடைத்து தரம்பிரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். இந்த கம்பெனியில் உற்பத்தி மேலாளராக முத்துகிருஷ்ணன்(34), மேலாளராக கீழிருப்பு கிராமத்தை சேர்ந்த சத்தியஞானகுரு(26), தொழிலாளர்களை அழைத்து வரும் சூப்பர்வைசராக தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(41) ஆகியோர் பணிபுரிந்து

வந்துள்ளனர்.

 சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் ரூ. 6 லட்சம் மதிப்பிலான முந்திரி பருப்பினை திருடியதாக தெரிகிறது. இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் துரைமுருகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், சப்- இன்ஸ்பெக்டர் பரணிநாதன் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: