கோவில்பட்டி, செப். 18: ஆர்கே நகரில் ரூ.20 டோக்கன் காட்டி வெற்றி பெற்ற டிடிவி தினகரனால் தொகுதிக்குள் சுதந்திரமாக செல்ல முடியவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாகச் சாடினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:அமமுக துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், 18 எம்எல்ஏக்களையும் மனிதர்களாக மதித்ததாக தெரியவில்லை. கோவில்பட்டி தொகுதியில் நான் இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கனை காட்டி வெற்றி பெற்ற டிடிவி தினகரனால், தொகுதிக்குள் சுதந்திரமாக செல்ல முடியவில்லை.