×

பைக் மீது அரசு பஸ் மோதல் மத்திய ரிசர்வ் காவலர் பலி

கோவில்பட்டி, செப். 18: கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் மத்திய ரிசர்வ் படை காவலர் பரிதாபமாக இறந்தார். கோவில்பட்டி அருகேயுள்ள செமப்புதூரை சேர்ந்த ராமையா மகன் செல்லத்துரை (28).   மத்திய ரிசர்வ் படையில் காவலராக பணியாற்றிவந்த இவர், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் செமப்புதூரில்   இருந்து கோவில்பட்டிக்கு நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி   அருகே பசுவந்தனைரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து   கப்பிக்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பஸ், இவரது பைக்   மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த செல்லத்துரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.  விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார்  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா