தூத்துக்குடி, செப். 18: தூத்துக்குடியில் பெரியாரின் 140வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ஜே. ஜெகன், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, கருணாகரன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜோதிராஜா, ராமஜெயம், அனஸ், சிம்புநட்ராஜ், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் அருண்குமார், மீனவர் அணி புளோரன்ஸ், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், வக்கீல் அணி பூங்குமார், ரகுராமன், தொண்டர் அணி அமைப்பாளர் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் செங்குழி ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.