திருச்செந்தூர், செப். 18: திருச்செந்தூரில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருச்செந்தூர் டிராவல்லர்ஸ் பங்களா ரோட்டில் தனியார் ஓட்டல் அருகே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். தாடி வளர்த்திருந்த அவர் காவி வேட்டி அணிந்திருந்தபோதும் மேல்சட்டை அணியவில்லை. உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.