மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பலி

தூத்துக்குடி, செப். 18: தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி  போல்பேட்டையை சேர்ந்த மோகன் மகன் விஜயகாந்த்(31). லாரி டிரைவரான இவர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டம்மாள் என்பவரை காதலித்து திருமணம்  செய்து கொண்டு வண்ணார்பேட்டையில் வசித்து வந்தார்.  இந்நிலையில் அவர்  நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள பேன் வயரை பிளக்கில் சொருக  முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக  மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர்கள் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: