×

விநாயகர் சப்பர பவனி

உடன்குடி,செப்.18: குலசேகரன்பட்டினம் உதயமார்த்தாண்ட விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர பவனி நடந்தது. குலசேகரன்பட்டினம் உதயமார்த்தாண்ட விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலையில் அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் விநாயகர் சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை வெங்கடாசலம், புலமுத்து, சண்முகம், சண்முகசுந்தரம், தெய் வநாயகம், தென்தில்லையான், சங்கரநாராயணன், சுப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர்...