தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

விளாத்திகுளம், செப் .18: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழாவையொட்டி விளாத்திகுளம் அருகே அருங்குளம் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவுக்கு மாவட்டப் பிரதிநிதி புதுராஜன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இம்மானுவேல், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வேலாயுதப்பெருமாள், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜ், மாவட்டப் பிரதிநிதி ஆதிசங்கரர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் காளிராஜ், தட்சிணாமூர்த்தி, சிறுபான்மை அணி ஒன்றிய அமைப்பாளர் செல்வின், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார், ஊராட்சி செயலாளர் டேவிட் உள்ளிட்ட நிர்வாகிகள் என  ஏராளமானோர் பங்கேற்றனர்.

 ஏற்பாடுகளை அருங்குளம் ஊராட்சி திமுகவினர் செய்திருந்தனர்.  ஏரல்:  இதே போல் ஏரல் அடுத்த பழையகாயலில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது. கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிஜி ரவி தலைமையில் திமுகவினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், பழையகாயல் கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் ஜெயசங்கர், ஏரல் நகரச் செயலாளர் பார்த்திபன், சாயர்புரம் நகரச் செயலாளர் வரதராஜ் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

  வைகுண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் வாழவல்லான் மகராஜன், ஒன்றிய பொருளாளர் ஆனந்தராஜ், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், சுபமாரியப்பன், பிரபாகரன், வேங்கையன், காயல்முகம்மது, மாதவன், மகேஷ்வரன், ராமசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர்கள் மனோகர், கென்னடி, நட்டார், சமுத்திரம், தனசிங், சேவியர், துரைப்பழம், அணிகளின் துணை அமைப்பாளர்கள் தாமஸ், பாஸ்கர், சதீஷ், ஆனந்த், கிறிஸ்டோபர், மகிபன், கிளாடி, மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: