வேலூர், செப்.18: பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து மக்களை திசை திருப்பவே எச்.ராஜா பேசி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பிரசார பேரியக்கம் சார்பில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அருகே தொடங்கிய பிரசார பேரணியை தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் தொடங்கி வைத்தார். பேரணி அண்ணா கலையரங்கம் அருகில் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரசார பேரணி வரும் 23ம் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் திருப்பூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.