அஇஎமமுக கட்சி துவக்க விழா

கீழ்ப்பாக்கம்: அண்ணாவின் 110வது பிறந்தநாளில் அகில இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி துவக்க விழா, புதுடெல்லியில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளராக எம்ஜிஆர் நம்பி தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவராக எஸ்.ஜே.எஸ்.செல்லத்துரை, அமைப்பாளர்களாக பிரேமலதா, சுமதி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். மாநில, மாவட்ட, வட்ட, பகுதி கழக நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. கட்சிக்கு அதிமுகவின் கொடியை போல் உருவாக்கி நடுவில் அண்ணா உருவத்துக்கு பதிலாக எம்ஜிஆரின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

Related Stories: