புழல்: சென்னை செங்குன்றம், புழல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. புழல் மத்திய சிறைக்கு அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள மரத்தின் ராட்சத கிளை உடைந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் உடைந்து, சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பதால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் விழுந்துள்ள மின்கம்பங்கள், மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.