நண்பர்களுடன் வீட்டில் தூங்கிய வாலிபர் மர்மச்சாவு

வேளச்சேரி: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டாலின் (25). இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்து, பள்ளிக்கரணை துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் நண்பர்களுடன் தங்கி, வேலை தேடி வந்துள்ளார்.  நேற்று முன்தினம் நண்பர்களுடன் ஸ்டாலின் மது அருந்திவிட்டு தூங்கி உள்ளார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் ஸ்டாலின் எழாததால், சந்தேகமடைந்த நண்பர்கள் அவரை தட்டி எழுப்பியபோது, அவர் இறந்துகிடந்தது தெரியவந்தது.

Related Stories: