எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்: தமிழிசை

சென்னை: பிரதமர் மோடியின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜ மாநில கூட்டுறவு பிரிவு மற்றும் காஞ்சி வடக்கு மாவட்டம் இணைந்து, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா தமிழக பாஜ  மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சேலையூரில் நேற்று நடைபெற்றது. மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் நாகராஜன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கலந்து கொண்டு 68 குழந்தைகளுக்கு மத்திய அரசின் செல்வ மகள் திட்டத்தின் மூலம் சேமிப்பு கணக்குகள், 68 பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு, மூக்குகண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முன்னதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எச்.ராஜா தான் பேசவில்லை என்று கருத்து தெரிவித்தார். எனவே, அவர் தரப்பு கருத்தை கூற அவருக்கு ஒரு வாய்ப்பை நாம் அளிக்கவேண்டும். பெரியார் சிலை அவமதித்தது யாராக இருந்தாலும் தலைவர்களை அவமதிப்பதை பாஜ அனுமதிக்காது. அது  கண்டனத்திற்குரியது. கருத்துக்கு கருத்து மோதல் இருக்கலாம். ஆனால், வன்முறையாக இருக்க கூடாது’’ என்றார்.

Related Stories: