குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் : கிண்டியில் பரபரப்பு

ஆலந்தூர்: கிண்டி அருகே குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  சென்னை கிண்டி, கன்னிகாபுரத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே ஒரு தொட்டியில் இருந்த குப்பைகளை நேற்று காலை துப்புரவு ஊழியர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, தொட்டிக்குள் குப்பைகளுக்கு இடையே தொப்புள்கொடி சுற்றிய ஒரு பெண் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்ததும் கிண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: