வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

திருக்கோவிலூர், செப். 12: திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் சேதுபதி(26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் மகன் ரவி(24) என்பவரது குடும்பத்திற்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று சேதுபதி தனது நிலத்தில் இருந்தபோது அங்கு சென்ற ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதனை தட்டிக்கேட்ட சேதுபதியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சேதுபதி, திருப்பாலப்பந்தல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரவி, வீரமணி, தனபால், சதீஷ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அதில் வீரமணி(44), தனபால்(54) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories: