புதுச்சேரி, செப். 12: முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவையில் பூக்கள் விலை கிடுகிடுவென எகிறியது. ஒரு கிலோ மல்லி ரூ.1000க்கு விற்றது. புதுவை பெரிய மார்க்கெட்டுக்கு திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இன்று (12ம் தேதி) முகூர்த்த நாள், நாளை விநாயகர் துர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி ஒரு கிலோ மல்லி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்றது, நேற்று ரூ.1000க்கு எகிறியது.