புதுச்சேரி, செப். 12: இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் ராஜாங்கம், லெனினிஸ்ட் கம்யூ., பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தியுள்ளது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை அறிவித்துள்ளது. சர்வாதிகார ஆட்சியை நடத்தி, நாட்டு மக்களின் வாழ்க்கையை சீரழித்த 4 ஆண்டு கால மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.