ஆனைமலை, செப். 12: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில் ஆனைமலை மற்றும் கோட்டூர் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 62விவசாயிகள் மொத்தம் 571மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்(பொறுப்பு) மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில், முதல் தரம் 372மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.90.90 முதல் அதிகபட்சமாக ரூ.96.10வரையிலும். இரண்டாம் தரம் 199மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.65.65 முதல் ரூ.85.80வரையிலும் என, விவசாயிகள் கொண்டு வந்த, மொத்தம் இருபத்தி எட்டரை டன் கொப்பரை ரூ.22.55லட்சத்துக்கு ஏலம்போனது. இதனை 9வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என்று, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.