பெ,நா,பாளையம்,செப்.12: நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் அவசியம் என்று கோவையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில், சுவாமி விவேகானந்தர் சிக்காகோ நகரில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டில் எந்த துறையில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றாலும் கல்வி மிக முக்கியமானது. மாணவர்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம். லஞ்சம், ஊழல் அற்ற நாட்டை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும். ஒவ்வொருவரும் நல்ல குணநலன்களோடு இருப்பதோடு பிறமதங்களில் உள்ள நல்ல கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,