மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர் தான் மத்தியில் பிரதமராக முடியும்

தென்காசி, செப்.12: தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக மற்றும் நகர திமுக சார்பில் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது: இந்திய ஜனாதிபதிகளாக கிரி, சஞ்சீவி ரெட்டி, கே.ஆர்.நாராயணன், பிரதீபா பாட்டீல் என பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கருணாநிதி. தேவகவுடாவை பிரதமராக்கியவர் கருணாநிதி. நூறு ஆண்டு வரலாறு உள்ள ஒரு இயக்கத்திற்கு 50 ஆண்டுகள் தலைவராக இருந்தவர். அவர் போன்று இனி ஒரு தலைவர் பிறக்க முடியாது.

ஆனால் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்ற தத்துவத்தின் படி அந்த இடத்தை மு.க. ஸ்டாலின் நிரப்பியிருக்கிறார். அவர் ஆலுக்கு விழுதாக இந்த இயக்கத்தை தாங்கி பிடித்திருக்கிறார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பணியாற்றுகிறார்.

 ஸ்டாலின் நாள் தோறும் போராட்டங்களை அறிவித்து வருகிறார். மேயர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு நிலைகளில் தனது திறமையை நிரூபித்தவர். அடுத்த முறை மு.க. ஸ்டாலின் கை காட்டுபவர் மத்தியில் பிரதமராக முடியும். மக்களின் ஆதரவு அந்த அளவிற்கு திமுகவிற்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்துக்கு 14வது வட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், முன்னாள் எம்.பி.தங்கவேலு, முன்னாள் எம்.எல்.ஏ.ரசாக், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், எம்எல்ஏக்கள் மைதீன்கான், லெட்சுமணன், மாநில மாணவரணி ஷெரீப், சீனிவாசன், சரவணன், மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பாண்டி, ஆயான்நடராஜன், பேபி, மாடசாமி, சேக்தாவூது, ரவிசங்கர், செல்லத்துரை, சங்கரபாண்டியன், நகரசெயலாளர்கள் ரஹீம், சேகனா, தொழிலதிபர் காளிதாசன், ஆபத்துக்காத்தான், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, செல்லத்துரை, பொதுக்குழு அன்புமணிகணேசன், செங்கோட்டை வக்கீல் வெங்கடேசன், மல்லிகாகதிரவன், மாணவரணி வக்கீல் ராஜா,  வர்த்தக அணி வளன்அரசு, டாக்டர் மாரிமுத்து, மோகன்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஆறுமுகச்சாமி, முத்துராமலிங்கம், இசக்கிபாண்டியன், திவான்ஒலி, செண்பகவிநாயகம், பரமசிவன், சைபுன்னிசா, பூங்கொடி, சுப்பையா, சங்கர், முகம்மது இஸ்மாயில், முகம்மதுஅலி, முத்துக்குமார், பாஸ்கால், சிவக்குமார், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, மந்திரம், மாரியப்பன், ராஜராஜன், முத்தையா, பவுல், துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, அற்புதராஜ், காதர்அண்ணாவி, ஹக்கீம், முத்துமீரான், பாலாமணி, சங்கரன்வாத்தியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நகர செயலாளர் சாதிர் வரவேற்றார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம் தொகுத்து வழங்கினார்.  ராம்ராஜ் நன்றி கூறினர்.

Related Stories: