ஜோலார்பேட்டை, செப். 11: ஜோலார்பேட்டையில் ரயில்வே தண்டவாள பராமரிப்பாளரை தாக்கிய டிடிஆர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனா(45), ரயில்வே ஊழியர். இவர் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கம்பட்டி ரயில் நிலையத்துக்கும் பச்சூர் ரயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், நேற்று குப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வருவதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சக ஊழியர்களுடன் குப்பத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி பயணம் செய்துள்ளார்.அப்போது, அதே ரயிலில் டிடிஆராக பணியில் இருந்த மாணிக்கவாசகம்(42) என்பவர் மல்லிகா அர்ஜூனா உட்பட ரயில்வே ஊழியர்களை முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் எதற்காக பயணம் செய்கிறீர்கள் எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டினாராம்.