×

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி கழகம் தகவல் மது விற்ற 2பேர் கைது

அரியலூர், ஆக.15: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உதயநத்தம்  பகுதியில்  தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு  ஒருவர் மறைத்து வைத்து மதுபாட்டில்களை  விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரனையில் மதுபாட்டில்கள் விற்றது உதயநத்தம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த சின்னமணி(55) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சின்னமணியை கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். அதேபோல் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணகெதி கிராமத்தை சேர்ந்த தங்கையன் மகன் தனராஜ்(30). இவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தனராஜை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...