×

பட்டுக்கோட்டை கோர்ட் தீர்ப்பு அடிப்படை வசதி கேட்டு தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை, ஆக. 15: அடிப்படை வசதி செய்து தரக்கோரி தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தஞ்சை சரபோஜி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும், கேண்டீன், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்ததர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கல்லூரி முதல்வரிடம் பலமுறை தெரிவித்தனர்.

ஆனாலும் அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து தஞ்சை சரபோஜி கல்லூரி முன் வகுப்பு புறக்கணித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் அருண் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 2 வாரங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தராவிட்டால்  கல்லூரிக்குள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள்  தெரிவித்தனர்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...