×

சுதந்திர தினவிழாவையொட்டி

கும்பகோணம், ஆக. 15:  இன்று சுதந்திர தினவிழாவையொட்டி கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முதல் இரவு வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தலைமை காவலர்கள் கோபிநாதன்,

ஆறுமுகம், காவலர் முருகன் உட்பட 10க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார், கும்பகோணம் வழியாக செல்லும் அனைத்து ரயில்கள், ரயில் பயணிகள் கொண்டு வந்துள்ள பைகளில் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனை செய்தனர். மேலும் அனைத்து பயணிகளிமும் ரயில் அல்லது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படியான பொருட்கள் கிடந்தாலோ, சந்தேகப்படுமாறு நபர்கள் இருந்தாலோ உடனடியாக இலவச அழைப்பு எண் 182 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கினர்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்