×

குமரி மாவட்ட கேரள பென்சனர்களுக்கு ஓணப்பண்டிகை படி அறிவிப்பு

நாகர்கோவில், ஆக. 15:  குமரி மாவட்ட கேரள அரசுபென்சனர்கள் சங்க பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கேரள அரசு அதன் சர்வீஸ் பென்சனர்கள் உள்பட எல்லா பிரிவு பென்சனர்களுக்கும் ஒன்றுபோல் ஓணப்பண்டிகை படியாக ₹1000ம் வீதம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அடுத்தமாத(செப்டம்பர்) பென்ஷனும் முன்பணமாக வருகிற 17ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம். குமரி மாவட்ட கேரள அரசு பென்சனர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்கள் மற்றும் வங்கிகள் மூலம் வருகிற 17ம் தேதி முதல் ஓணப்பண்டிகை படியும், அடுத்தமாத பென்ஷனும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சாமியார்மடம் அருகே குழிக்குள் விழுந்தவர் மீட்பு