×

ஆடிப்பூரவிழா முத்துமாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்

கந்தர்வகோட்டை, ஆக.14: கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆடி மாதம் முழுவதும் கோயிலில் ஒவ்வொரு தினமும் வெவ்வேறு வழிபாடுகள் நடத்தப் பட்டன. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்  செய்யப் பட்டிருந்தது. நேற்று முன்தினம் கடைசி வெள்ளிக்கிழமையாதலால் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கந்தர்வகோட்டை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து  வந்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags :
× RELATED போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார்...