×

வேதாரண்யம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் இரண்டு பேர் கைது

வேதாரண்யம், ஆக.14: வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தோப்புத்துறை மெயின் ரோட்டில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டபோது மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் மணல் ஏற்றி வருவதற்கு எந்த அனுமதியும் இல்லாததால் டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டரை ஓட்டி வந்த தென்னம் புலத்தைச் சேர்ந்த பாஸ்கர் ( 24), வீரமணி (24) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்