×

ஆயில் இன்ஜின்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை குழாய்கள் பதித்து ஆலங்குடி அருகே டூவீலர் மோதி இன்ஜினியர் பலி

ஆலங்குடி,ஆக.14: ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மகன் ஹரிஹரசுதன் (26). பி.இ. பட்டதாரி. இவர் சென்னையில் வேலை பார்த்துள்ளார். அங்கு போதுமான வருமானம் கிடைக்காததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இவர் நேற்று தனது நண்பர்களுடன் மாங்காட்டில் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப் போது ஹரிஹரசுதன் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த  ஹரிஹரசுதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வடகாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றவரை  தேடி வருகின்றனர்.

ெபான்னமராவதி அருகே மேலத்தானியம் அடைக்கலம்காத்தார் கோயிலில் ஆடி வழிபாடு பொன்னமராவதி,ஆக14: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் அடைக்கலங்காத்தார்கோயில் ஆடி சிறப்பு வழிபாடு நடந்தது. அடைக்கலங்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்காணி சித்தன், சன்னாசி, பட்டாணி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், பழவகைகள் என பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...