×

நாகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 189 மனுக்கள் குவிந்தன

நாகை,ஆக.14:  நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த சிறப்பு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில், வங்கி கடன், உதவி தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 மனுக்களும், மக்கள் குறைதீர் கூட்டத்தில், புதிய ரேஷன்கார்டு, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 182 மனுக்களும் என மொத்தம் 189 மனுக்கள் பெறப்பட்டன.  

மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒரு வார காலத்திற்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ. முருகேசன், தனித்துணை கலெக்டர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது