×

படத்திற்கு மலர் அஞ்சலி கொண்டத்தூர் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு 5ம் நாள் நினைவு தினம் அனுசரிப்பு

செம்பனார்கோவில், ஆக. 14: செம்பனார்கோவில் அடுத்து கொண்டத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு 5ம் நாள் நினைவு அஞ்சலியை செலுத்தினர்.  தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்ச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 7ம் தேதி மரமணமடைந்தார். இதையொட்டி செம்பனார்கோவில் திமுக வடக்கு ஒன்றிய சார்பில் ஒவ்வொரு நாளும் ஊராட்சிகளில் மவுன அஞ்சலியும், நினைவு அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இதில் திமுக சார்பில் மட்டுமில்லாமல், பொதுமக்கள், வர்த்தகர்கள் அனைத்து கட்சியினர், மாற்றுத்திறனாளிகள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று செம்பனார்கோவில் அடுத்து கொண்டத்தூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 5ம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.  திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் மாலை அணிவித்து மலர் தூவி 5ம் நாள் நினiவு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மாவட்ட பிரதிநிதி தென்னவன், ஊராட்சி பொறுப்பாளர் சுதாகர், ராமதாஸ், மகேந்திரன், பாண்டியன், முன்னாள் செயலாளர் ரவி, இளைஞர் அணி விஷ்வா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு சீர்காழி, ஆக.14: சீர்காழியில் அரசு அலுவலர் ஒன்றிய இணைப்பு சங்கமான தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக லெட்சுமணன், துணை தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக பாலு, துணை செயலாளராக ஜி.ரவிச்சந்திரன், பொருளாளராக முருகேசன், துணை பொருளாளராக செல்வம், ஆலோசகராக இளங்கோவன், கலைவாணன், நமச்சிவாயம், விஜயன், சட்டைய்பபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சாலை பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...