×

கருணாநிதி மறைவையொட்டி திமுக கூட்டணி கட்சியினர் அமைதி ஊர்வலம்

நாகை,ஆக.14: கருணாநிதி மறைவையொட்டி நாகூரில் திமுக கூட்டணி கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். நாகை தெற்கு மாவட்டம் நாகூர் நகர திமுக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில், தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவை முன்னிட்டு நினைவேந்தல் மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அமைதி ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நாகூர் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு அனைவரும் மலர்தூரி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிமுத்து, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தங்கதுரை, நகர நிர்வாகிகள் அகமது உசேன், பன்னீர்செல்வம், குப்புசாமி, கரிகாலன், நாகரத்தினம், வட்ட செயலாளர்கள் பாபு, ஆல்பர்ட், முகமது பாரூக், விஜயன், முகமது ரபீக், கலைதாஸ், செல்லதுரை, கழக முன்னோடிகள் நடராஜன், நூரூல் அமீன், அமீன், அப்துல்ரகீம், கழக பாடகர் ஜக்கிரியா, இந்திய தேசிய லீக் தேசிய பொதுசெயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் அப்துல் காதர் மரைக்காயர், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் நௌசாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது அலி, ஜான்சாசிப், கலிப்புல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜபரூல்லாஹ், மாவட்ட துணை தலைவர்கள் ரபீக், முகமது கனி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் சிராஜுதீன், நாகூர் நகர அமைப்பாளர் பாபா பகுருதீன், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகிகள் சம்சுதீன், ஜாகிர், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் சுப்பராயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர பொறுப்பாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர்கள் முருகா, கண்ணையன், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி தவுபிக் மற்றும் வணிகர் சங்கம், வர்த்தகர் சங்கம், ரோட்டரி சங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


ஆசிரியர்கள் அமைதி ஊர்வலம்:  கொள்ளிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்து விதமாக கொள்ளிடம் ஒன்றிய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் கொள்ளிடம் தொடக்கக்கல்வி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு ரயில்வே ரோடு, கடைவீதி வழியாக கொள்ளிடம் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...