×

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் திமுகவினர் மனு இலுப்பூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

இலுப்பூர், ஆக.14: இலுப்பூர் மற்றும் பாக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம பெறும் பகுதிகளில் இன்று (14ம் தேதி) மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து இலுப்பூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இலுப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று (14 தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை இத்துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இலுப்பூர், ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு மலைக்குடிபட்டி, மற்றும் கொடும்பாளுர் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது.

இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் புங்கினிப்பட்டி, இருந்திராபட்டி, பாக்குடி, விளாபட்டி, மாங்குடி, மருதம்பட்டி, இராப்பூசல், லெக்கனாப்பட்டி, மற்றும் பையூர் ஆகிய பகுதிகளுக்கும் இன்று மின்சாரம் இருக்காது. என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தூர் துணை மின்நிலைய பகுதிகள்:  மாத்தூர், குமாரமங்கலம், ஆவூர், ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, நால்ரோடு, செங்கலாக்குடி, குண்டூர் பர்மா காலனி, குளவாய்பட்டி, துரைக்குடி, முள்ளிப்பட்டி, திருமலைசத்திரம், வங்காரம்பட்டி.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா