×

நாளை 72வது சுதந்திர தினம் புதுகை ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு ஏற்பாடு தயார் நிலை

புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டையில் நாளை சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்பு நடைபெறும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தை ஊழியர்கள் சுத்தப்படுத்தி கொடிகம்பத்திற்கு வர்ணம் பூசி தயார் நிலையில் வைத்துள்ளனர்.  நாடு முழுவதும் நாளை(15ம் தேதி) இந்தியாவின் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கணேஷ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். இதில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இதற்காக சுதந்திர தின விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக மைதனத்தில் உள்ள   கொடிகம்பம், அதன் கீழ் பகுதியில் உள்ள சிமென்ட் பில்லர்கள் ஆகியவற்றுக்கு  வண்ண வண்ண பெயின்ட் பூச்சுகள் செய்துள்ளனர். இதனால் அந்த இடம் பளிச் என்று தெரிகின்றது. சிறப்பு விருந்தினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் அமர்வதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நாளை சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...