×

சிலை கொள்ளையர்களுக்கு தண்டனை கோயில் உண்டியலில் இந்து முன்னணி மனு

ஜெயங்கொண்டம், ஆக.14: கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது. கோயில் சிலைகள் கொள்ளை அடிக்கப்படுவது. கோயில்கள் குளங்கள் காணாமல் போனது. இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையை நீயே கொடுத்து போராட சக்தியை கொடு என்ற மனு எழுதி இந்து முன்னணி சார்பில் ஜெயங்கொண்டம் காவிரி கரையில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் தங்களது மனுக்களை வைத்து பூஜை செய்தனர், பின்னர் கோயிலில் உண்டியலில் தங்களது மனுக்களை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகர தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், ரமேஷ், மாவட்ட துணை தலைவர் பழனிசாமி, நகர செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், நாகப்பன் மற்றும் நிர்வாகிகள் சூரி, மனோஜ், குருராஜா, சதீஷ், சிவகுமார், உட்பட பலர் கலந்துகொண்டு மனுக்களை உண்டியலில் செலுத்தினர்.இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது