செந்துறை, ஆக.14: திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் (வ) ஞானமூர்த்தி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், திக, விசிக கட்சியினர் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலம் அண்ணா சிலையிலிருந்து 500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் புறப்பட்டு பேருந்துநிலையம், பெருமாள் கோயில் தெரு, முஸ்லீம் தெரு, திரவுபதையம்மன் கோயில் தெரு, உடையார்பாளையம் சாலை வழியாக சென்று மீண்டும் திமுக அலுவலகம் அருகிலுள்ள அண்ணாசிலைக்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் செல்வராஜ், சிவபாஸ்கர், விஸ்வநாதன், பிஆர்.பாண்டியன், எழில்மாறன், காளமேகம், சித்ரா உள்ளிட்டி திரளானோர் கலந்து கொண்டனர்.