×

நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை ஆடிப்பூரத்தை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

பாடாலூர்,ஆக.14: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் கடைசியில் ஆடிப்பூரம் பூஜை நடைபெறுவது. வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரம் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையின் போது  கோ பூஜை, தம்பதி பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, ஸ்தாபனம் பூஜை உள்ளிட்ட  பல பூஜைகள் காமாட்சி அம்மனுக்கு நடந்தது. இந்த பூஜை பால், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி போன்ற வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், குரூர், பொம்மனப்பாடி உள்ளிட்ட பெரம்பலூர் சுற்றுப்புற கிராமங்களில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு கலந்து கொண்ட அனைவரும் பிரசாதம்  வழங்கப்பட்டது இதற்கான விரிவான  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது